Thursday 29 September 2011

குழந்தை வளர்ப்பு





குழந்தை வளர்ப்பு

ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்ற வாறுதான் அமையும். பெற்றோர்களுடைய வினைத் தொடரே குழந்தை, நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள் உடலை, உயிரை, அறிவைச செம்மையாகப் பேணிக் காக்கவேண்டும்.

தவம், உடற்பயிற்ச்சி, ஆராய்ச்சி இவற்றால் தங்களை உயர்த்துக் கொள்ள வேண்டும். அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், போதைப் பொருட்களை உட்கொண்ட மயக்கத்திலும், இருவரில் ஒருவர் வருத்தமாகவோ நோயுற்றோ இருக்கும் நாளில் ஒரு குழந்தை கருத்த்தரிக்குமேயானால், அது உடலிலும், அறிவிலும், தரம் குறைந்த தாகவே அமையும்.

மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் மனம் உற்சாகமாக இருக்கம்படி அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிவிற் விழிம்பில் உற்பத்தியாகும் குழந்தை, உடல், அறிவு நலன்களோடு, குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் பெரும் நலம் விளைக்கத்தக்க நல்நிதியாக அமையும்.

பிறந்த பிறகும் வளர்க்கும் முறையில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அந்தக் குழந்தை எந்த எந்தச் செயலில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தச் செயல்களைப் பெற்றோர்கள் குழந்தையின் எதிரில் செய்யவே கூடாது. கடைசியாக மக்களுக்குச் சொத்துச் சேர்த்து வைக்க வேண்டும் என்பது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை. அவர்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற கல்வியைக் கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

---------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment