Tuesday 13 December 2011

வாழ்வாங்கு வாழ வழி.






வாழ்வாங்கு வாழ வழி.

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனத்தையும் சரிப்படுத்திக் கொண்டால், நமக்குப் பின்னாலே பிறக்கக் கூடிய குழந்தைகள் எப்படியிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்புக் கொண்டதாகத் திகழும்

அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்குத் தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியான முறை இரண்டு வாய்ப்பு அளிக்கும். வேலைப்பழு அதிகமாகும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி, தியானம் இவற்றை முதலில் நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளூர இயங்கி வரும் இறைச் சக்திக்குத் தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி,  உளப்பயிற்சி செய்து நாளுக்குநாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.

தினந்தோரும் நாம் காலையிலிருந்து மாலைவரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம்.  சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். சுத்துப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்? அதே போல தினந்தோரும் மனதையும், உடலையும் உபயோகிக்கிறோம், அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்கங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்குத் தயராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?

உடலுக்குக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக்கூடிய தியானம்ப் பயிற்சி உயிர்க்குறுதி அளிக்கும் காயகல்பப்பயிற்சி இம்மூன்றும் உடலையும், உள்ளத்தையும், உயிரையும் மேன்மைப்படுத்தி, தூய்மைப்படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பனவாகும்.,

----------------------------------------------------------------------அருள் தந்தை
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment