Monday 18 June 2012

கடமையில் விழிப்புணர்வு.





கடமையில் விழிப்புணர்வு.

இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்ட போது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்படவேண்டும். இதோடு தீமையைநீக்கி, நன்மையையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.

பிறர்க்கு உதவி புரிவத்தில் கூட நாம் இக்காலத்தில் நாம் விழிப்பபோடு இருக்க வேண்டியுள்ளத்து. உதவி தேவைப்படுபடுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள்  என்று நினைப்பதற்கில்லை. அப்படித் தகுதியுடையவர்களாயிருப்பினும், தகுதி பெற்ற எல்லோரருக்குமே நாம் உதவ செய்ய முடியுமா என்பதைம் நாம் சிந்தித்துப்பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம் கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே விட்டிக் கொட்டுத்து விட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்.

பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, பிறர் உதவி என்பது கூறிய ஆயுதம் போன்றது. தவறி மாட்டிக் கொண்டால், அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்க படி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்க க்கூடும் என்று விசாரணையை துவக்குகிறாரோ அதே போல் நம்மிடம் உதவி நாடுபவரை ‘இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்க கூடாது என்ற ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.

உலக க் கடமையில் ஈடுபட்டுள்ள நமக்குப் பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமைகளைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment