Monday 26 September 2011

கணவன் – மனைவி நட்பு





கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக்காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால், மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது.  நமது மனவளக்கலையில் கணவன் மனவி இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை அதிகமாக வலியுருத்தி வருகிறோம். நட்பயையும் அன்பையும் வளர்க்க வாழ்த்து ஒரு ஆற்றல் வாய்ந்த மந்திரமாகும்.

கணவன் மனைவி இருவருமே மனவளக்கலை பயின்றால் நல்ல பயன் கிட்டும், சில காரணங்களால் ஒருவருக்கு இக்கலையில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதனால் ஒருவரே ஒரு குடும்பத்தில் மனவளக்கலையில் ஈடுபட்டு வரலாம். எனினும், அந்த ஒருவர் சிறப்பாக இக்கலை பயின்று தன் தரம் உயர்த்தி மற்றவர்க்கு நலம் விளைத்தும், வாழ்த்தியும் வந்தால் நிச்சையம் அவரும் குறுகிய காலத்திலேயே இக்கலையில் விருப்பம் கொள்வார்கள்.

பல மக்கள் வாழ்வில்  தொடர்பு கொண்டு கண்ட உண்மைகளையும், என் வாழ்வில் கண்ட அனுபவங்களையும் வைத்துக் கொண்டே மேற்கண்ட அன்புரைகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று தடவை திரும்பித் திரும்பி படித்து, ஆழ்ந்து சிந்தித்து உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு நிறைவு பெருங்கள். எனது அனுபவ அறிவைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்குக் கொடுக்க முடியும்.

------------------------------------------------------------------------------அருள் தந்தை

வாழ்க வையகம்---------------------------------------------------வாழ்க வளமுடன்

-------------------------------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment