Tuesday 27 September 2011

கணவன்-மனைவி உறவு




கணவன்-மனைவி உறவு

மனித மனம் ஒரு வியப்பானது. ஒரு பொருளை விரும்பினால், அதனை அடையாத முன்னம் அதனிடம் பல நன்மைகளுயும், மேன்மைகளையும் கற்பித்துக் கொண்டு இன்புறுவது, அதை அடைந்த பின்னர் அதில் குறைகளைக் கற்பித்துக் கொண்டு சோர்வடைவது. இது விரிந்த நோக்கம் இல்லாதவர்களிடம் இயல்பாக இருக்கும். இந்தக் குறைக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். நல்லதையும் உயர்வையும் பாராட்டுங்கள். குறைகளை நுட்பமான முறையில் எடுத்து விளக்கவும், நிரைவு செய்யவும் முயலுங்கள். வாழ்வு வளம் பெறும்

கணவனை மனவியும், மனைவியை கணவனும் சிறப்புக் காணுமிடத்தும், உயர்வைக் கண்டு பாராட்ட வேண்டியது அவசியம். இது அன்பையும், நட்பையும் பெருக்கும், உறுதிபடுத்தும். இதனால், எப்போதுமே பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்பதில்லை, அப்படிச் செய்தால் அது முகத்துதியாக மதிப்புக் குறையும்.

ஒரு சில குடும்பத்தில் கணவனோ, மனைவியோ பலரால் பாராட்டப் படுவராயும், புகழப்படுபவராயும் இருக்கலாம். ஊர் பாராட்டுவதைப் போல், தன் வாழ்க்கைத் துணைவரும் பாராட்ட வேண்டும் என இதிர் பார்பார்கள். இங்கு மிக நுணுக்கமான உண்மை அடங்கி இருக்கிறது. வாழ்க்கைத் துணைவரை ஊர் புகழும்போது அந்தப் புகழ்ச்சியில் தான் மகிழ்வுற்றுத் திளைத்திருப்பார்கள். அது அவருடைய உரிய சொத்தாக விடுகிறது.

ஆதலால், தானும் புகழ வேண்டுமென்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த உண்மையை உணராதவர்கள், தன் வாழ்க்கைத் துணைவர் புகழவில்லையே என்று ஏக்கமும், வருத்தமும் அடைவார்கள். இது தேவையற்ற எண்ணம். ஊர் புகழும்போது மனைவியோ, கணவனோ புகழவில்லையே என்ற குறை எவரும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அலட்சியம் செய்ததாக எடுத்துக் கொள்வதும் நல்லதன்று.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment