Friday 4 November 2011

இன்ப ஊற்று





இன்ப ஊற்று

என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன், என்னைப் படைத்திருக்கிறான். பக்திமானாக இருந்தாலும்,  ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதிநிதியாகவே,  அவனடைய பகுதியாகவே தான் இருக்கிறேன். பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது. இதைக்கொண்டு என்னென்ன நலம் செய்து கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன்.

பிறருடைய உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உதவி செய்து அந்த உதவியை  நான் பெறுவேன்  என்ற அளவிலே உதவுபவர்களெல்லாம் நாம் பதில் செய்து கொண்டிருப்பேன் என்ற அளவிலே, கடமை உணர்வோடு நின்று பாருங்கள், பெரிய சக்திவாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகி விடும். தினந்தோறும்  அதைப் பயன் படுத்துங்கள்.

நீங்கள் ஒரு அதிகாரியாக இருக்கலாம்.  உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும். நீங்கள் இந்தப்புறம் திரும்பி நாம் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால், அத்தனை ஆயிரம் மனிதர்களும் அவர்களின் தேவைகளும் நேரடியாக உங்களுக்குத் தெரியத் தொடங்கும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால், அவ்வாறு செய்யச் செய்ய இன்ப ஊற்றுத் தான் மனதிலே வளரும். தெய்வத்தோடு தெய்வமாகவே நிற்கும் ஒரு நல்ல காட்சி உள்ளத்தில் ஏற்படும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment