Monday 14 November 2011

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்.





திரு.அண்ணாத்துரை மயில்சாமி

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்.

மனிக வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Fath) என்றால்  “ஒரு பெரியசக்தியானது பிரஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது, அது என்னள்ளும் இருக்கத்தான் வேண்டும், நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும்.

அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்” – இவ்வாறு நமக்கு  அப்பாற்பட்ட ஒரு சக்தி முழ்மையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் “மதம்” (Religion) என்பதாகும்.

அதற்கு மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மறாத  ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான்  “ஞானம்”.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment