Monday 14 May 2012

பேரின்ப வெள்ளம்.




பேரின்ப வெள்ளம்.

அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையானது விண் முதல் ஆற்றிவாகி, மனித மனத்தின் மூலம் தனது பரிமாணப் பயணச் சரித்திரத்தை உள்ளுளர்வாக க் காட்டிய பேரறிவிற்கு நன்றி க்கூறுமிடத்து, அத்தகு உள்ளுணர்வு அடைந்த நன்மையே இறைநிலைக்கு அர்பணம் செய்து மகிழ்ச்சியடைவோம்.

மேலும் உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்தப் பேராதார இறை நிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.

எல்லா உயிர் வகைகட்கும், உணவாகவும் மற்றும் வாழ்க்கை வசதிகளாகவும், சிக்கலில்லாமலும், வறையறையின்றியும், தங்களது வளர்ச்சியை அர்பணித்து உலகைக் காத்து வருகின்றன தாவர இனங்கள்.

அதற்கு தாவர வர்கங்களை அன்போடும், கருணையோடும் உருவாக்கி, இதர உயிரினங்களுக்கு அளித்துள்ள பேரன்புக்காகவும், கருணைக்காகவும் இறைநிலைக்கு நன்றி கூறி, அப்பெருமகிழ்ச்சியான பேரின்ப வெள்ளத்தில் திளைப்போம்.

ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கருதி என்றும் கொண்டாடுவோம். 

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment