Monday 14 May 2012

உள்ளத்தனைய உயர்வு.




உள்ளத்தனைய உயர்வு.

தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டும். நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள்.  தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலும் கூட அது  தீய எண்ணத்தை விலக்கும். வாழ்க்கையில் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் பிரச்சனையை வெற்றி கொள்வதற்கான சங்கற்பமாகவும் அது இருக்கலாம். அல்லத்து வாழ்க்கையில் முன்னேற்றத்தின்கான   பொதுவானதொரு சங்கற்பமாகவும் இருக்கலாம்.

அன்பர்களே! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள். நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள்.  உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும் ஆராயுங்கள். விழிப்பு நிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்.

எண்ணம் தான் அனைத்துமே! எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை. நன்மையும் தீமையும் எண்ணத்துள்ளே! வெற்றியும், தோல்வியும் சிரிதும் பெரிதும் எண்ணத்துள்ளே! வெற்றியும் தோல்வியும் எண்ணத்தாலே! பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம் தான் உயர்வானது. இன்பமோ, துன்பமோ எண்ணத்திற்கு அப்பால் இல்லை.


எனவே அன்பர்களே! எண்ணத்தின் தாழ்வு உங்கள் தாழ்வு. பிறகு யார்மீதும் குறை சொல்லிப்பயனில்லை. எண்ணத்தின் உயர்வு உங்கள் உயர்வு. எண்ணத்தின் உயர்வால் உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து உங்களுக்கும் உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்ய இன்று முதல் சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment