Monday 3 October 2011

பெற்றோர்ர் தவம் – பிள்ளைகள் நலம்






பெற்றோர் தவம் – பிள்ளைகள் நலம்.

மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அன்று. நோயே வராமல் காக்கலாம். நோய் என்றால் என்ன? இயற்கையாக தம்முடைய உடலிலே இந்தச் சுகத்திற்கு,  அதாவது உடல் நலத்திற்கு ஏற்ற எல்லாம் அமைந்து இருக்கிறது.  அவ்வப்போது ஏற்படுகின்ற குறையைக் கூட சரிக்கட்டிக் கொள்ளக் கூடிய அளவுக்கு இயற்கையினுடைய ஆற்றல் அமைப்பு நம் உடலிலே இருக்குறது. ஒவ்வொரு செல்லும் ஒரு இரசாயனச் சாலையாக வேலை செய்து கொண்டு இருக்கிறது நம்முடைய உடலிலே. நாம் அதைத் தெரிந்து கொண்டு ஒத்துழைத்தால் போதும், அதைக் கெடுக்காமல் இருந்தால் போதும்.  அதைத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருவமைப்புக் குறித்தும் அதிகமாக நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும். மரத்தை ஒட்டித் தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித் தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால், பெற்றோர்கள் மன நலத்திலே, உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக அமைய வேண்டும், இருக்க வேண்டும். பெற்றோர்கள் இடத்திலே ஒருவருக்கு ஒருவர் பிணக்கு, மனத்தாங்கல் இருக்குமேயானால், நமது உடலில் முக்கியமான சக்தியாகிய சிவகாந்த ஆற்றல் பிணக்குற்று அது விசத்தன்மையாக மாறக் கூடியதாகவே அமையும். அது குழந்தைகளையும் பாதிக்கும். ஆகவே, மனநலமும், உடல் நலமும் காத்து இனிமை காப்போம்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.


வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்

No comments:

Post a Comment