Thursday 27 October 2011

அடிப்படைத் தேவைகள்




அடிப்படைத் தேவைகள்

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம், இரத்த ஓட்டத்தையும், ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான இழைப்பு.

உள்ளம் அமைதியாகவும், உச்சாகமாகவும் இருக்க கடல், நதிகள், மலைகாடுகள் முதலான இயற்கைக்காட்சி. இவைகளைப் பார்க்க உலகத்தைச் சுற்றிவரும் வாய்ப்பு.

புலன்களையும், அறிவையும் ஒன்று படுத்தித் தனக்கும் பிறருக்கும் இன்பத்தை ஊட்டும் நடனம், பாட்டு, சிற்பம், ஓவியம் முதலிய கலைகள்.

அறிவைப் பயன்படுத்த வயதுக்கேற்ற தியான, தவமுறைகள், இவையனைத்தும் மனிதனுக்கு – மனிதர் வாழ்வுக்கு அவசியமாகும்.

மற்ற தேவையற்ற பொருட்களையும், செயல்களையும் விட்டு ஒழிக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் எவை என்று அறிந்து அவைகளின் உற்பத்தியையே நிறுத்துவிட வேண்டும். இவ்விதம் வாழ்ந்தால் உலகில் துன்பம் செயற்கையால் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கும்.

மனித இனம் சுகமாக வாழ்வதற்குத் தேவையான அனுபோகங்களை மட்டும் அளவுடன் கொண்டு, தேவையற்றவைகளை விட்டு விட வேண்டும்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment