Tuesday 18 October 2011

குடும்பக் கலை






குடும்பக் கலை.


யோகமுறையிலே “எளிய முறைக் குண்டலனி யோகம்” என்று ஒன்று முக்கியமானது.  அதன் பிறகு உடற்பயிற்சி, அதற்கு மேலாக  அகத்தாய்வு. அகத்தாயெவிலே எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல் சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான் யார் என்ற வினா எழுப்பி விடை காணுதல் என்ற அளவிலே வருகிற போது இந்த உடல்லெல்லாம்  தெளிந்த போது மனமும் தூயதாகத் தெளிவாக இருக்கிறது.

இருட்டிலே இருக்கின்ற போது அங்கு நல்ல வெளிச்சம் வந்தால்  எப்படியிருக்கும்? மேல் தளத்திலிருந்து படியிலே இறங்குகின்றோம் என்று  வைத்துக் கொள்ளுங்கள். விளக்கு இல்லை, சில சமையம் படி இருப்பதே தெரியவில்லை என்றால் என்னவாகும்?  ஆனால், படியிருக்கிறது என்று தெரிந்து விளக்கும் இருந்தால் எப்படியிருக்கும்? அதே போல் வாழ்க்கையிலே தெரிந்து கொள்வதற்கும், தெரிந்ததை நடத்தி, திருத்தி நாம் உறுதி எடுத்துக் கொண்டு அந்த முறையிலே வாழ்வதற்கும் ஏற்றதோர் பயிற்சி தான் மனவளக்கலை.

அதற்கு மேலாக உடலை நன்கு உறுதியாக வைத்துக் கொண்டு ஆன்மாவை வளதர்த்துக் கொள்வதற்குப் பெருந்துணை புரியும் கலைதான் காயகல்பக் கலை. அதை ஒழுங்காகச் செய்து வந்தால் மனிதன் எந்த நிலைக்கு உயர வேண்டுமோ அந்நிலைக்கு உயரலாம்.


----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment