Thursday 13 August 2015

எண்ணம், சொல், செயல்.

எண்ணம், சொல், செயல்.

வாழ்க வையகம்.-----------------------------------------வாழ்க வளமுடன்.


மனிதனிடம், மணமாக, பார்வையாக,  சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் ஏற்பட்ட பதிவுகளின் மூலம் செயல்படுவதினால் அவனைடைய எண்ணம், சொல், செயல், அனைத்தும் அவனைடைய பதிவின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவனூடைய நன்மைகள் யாவும் அலை மூலமாக வளிப்பட்கின்றது.


ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும்  பெற்றிருக்கிறான். ஆகவே, மனதின் நிலைக்கேற்ப அவனிடமிருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையான தாகவும், சில நேரங்களில் முரண்பாடுடையதாகவும் இருக்கின்றன  இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக் கூடிய பொருள் அல்லது மனிதனைப் பொறுத்து அமைவது இல்லை.அவை யாரிடமிருந்து செல்கின்றனவோ அவர்களைடைய தன்மையைப் பொறுத்து அமைகின்றன.

இந்த விஞ்ஞானத்தை, தத்துவவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேரூன்றச் செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாகப் பதிந்து நம் குணங்களை தீயபதிவுகளாகக் கட்டுப்படுத்துகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றித் தீயபதிவுகளைக் களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல  அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.


-------------------------------------------------------------------அருள் தந்தை.



No comments:

Post a Comment