Monday 17 August 2015

அறிவின் எல்லை.



வாழ்க வையகம்------------------------------------------வாழ்க வளமுடன்.

அறிவின் எல்லை

நாம் என்னென்ன நினைக்கிறோமோ அந்த அளவு அறிவிலே விரிந்து இருக்கின்றோம். விரிந்து அறிந்த நிலை ஒன்று, அந்த நிலையை ஒட்டி குறிப்பிட்ட அளவுக்கு இயக்கம் ஒரு பொருள் மீதி தனியாக அதைப் பயன்படுத்தும் போது அப்போது விரிந்த நிலைக்கே அறிவாலே எவ்வளவு விளக்கம் பெற்று இருக்கிறோமோ அந்த விளக்கம் அத்தனையும் சிறு சிறு விசயங்களை நாம் தெரிந்து கொள்ளும் போதோ, அதன் மீது மனம் செலுத்தும்போதோ, விரும்பும் போதோ அத்தகைய விரிந்த அறிவினுடைய தன்மை அத்தனையும், அந்த சிறு இயக்கத்திலும் பயன்படும்.

இப்பொழுது ஒரு மாநிலத்தை  ஆளக்கூடிய ஒரு பெரிய  அதிகாரி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் சாதாரண ஒரு ஊருக்காக திட்டம் ஒன்றை அவர் உருவாக்கும் போதோ, அதை கண்காணிக்கும் போதோ, மாநிலம் முழுமையும்  நிர்வகிக்கக் கூடிய நிலையிலே அந்த ஒரு சிறு விசயம் கூடச் சிந்திக்க முடியும்.அந்த இடத்திலே இருந்து சிந்திக்க க் கூடிய ஒரு எழுத்தர் அல்லது மற்றவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றி மட்டடுமே சிந்திக்க க்கூடிய மனம், அறிவு இருக்கும். அது போல் நம்முடைய செயலுக்கும்,தன்மைக்கும், இந்தப் பண்பாட்டிற்கும் தக்கவாறு, இந்த அறிவு எந்த எல்லையில் நிற்கிறது என்பதாக இருக்கிறது.

------------------------------------------------------------------------அருள் தந்தை.


No comments:

Post a Comment