Thursday 20 August 2015

சிந்தனையின் சிறப்பு.

 வாழ்க வையகம்----------------------------------------------------வாழ்க வளமுடன்.



சிந்தனையின் சிறப்பு.

நம் வாழ்க்கையில் அவ்வப்போது நான் எதைச் செய்வது என்ற ஒரு சிக்கல் வரலாம், அல்லது  பெருமளவிலான ஒரு மகிழ்ச்சியே கூட வரலாம். அந்தச் சிக்கலிலே அழுந்திவிடக் கூடாது. அல்லது அந்த மகிழ்ச்சியிலே அழுந்தி விடக் கூடாது.  இந்தச் சிக்கலிலேயிருந்து விடுபட வேண்டிய வழி என்ன என்று நினைத்தாலே போதும். சிக்கலிலே தீர்த்து வைப்பதற்குத் தயாராக இருக்கிறான். அவன் பக்கம் திரும்புவதற்கு வழி காண வேண்டும் என்று சொல்கிறேன்.

சிந்திக்கின்றவர்கள் அதைக் காணுகிறார்கள். சிந்தனைக்கு என்று திரும்பினாலே போதும், மற்றதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். அதைத்தான் வள்ளுவர்கூட, தனது குறள் ஒன்றில்  ஒரு மனிதன் முயற்சி எடுத்தால் இறைவன் அவனை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கிறான் எனக் குறிப்புத் தந்துள்ளார். அது உண்மை தான். இந்த உண்மையை நேரடியாக, அனுபவப்பூர்வமாகப் பல இடங்களில்  நான் உணர்ந்து இருக்கிறேன்.

--------------------------------------------------------------------அருள் தந்தை.


No comments:

Post a Comment