Saturday 15 August 2015

உணர்வு, உறவு


 வாழ்க வையகம்.----------------------------------------------------வாழ்க வளமுடன்


உணர்வு, உறவு

உணர்வு, உறவு, துறவு, இந்த மூன்று சொற்களையும் நான் ஆன்மீகத் துறையில்  அடிக்கடி பயன் படுத்தி வரிகிறோம். இப்பொழுது அந்த வார்த்தைகளிலே இன்னும் ஆழமாகச்செல்ல உள்ளோம். உணரவுக்கும் உறவுக்கும் ஓரளவு வித்தியாசம் உண்டு. ஒரு எஜமான் இருக்கிறான், அவர் கீழே ஒரு பணியாள் இருக்கிறான். எதற்காக அந்தப் பணியாள்  அங்கே வேலைக்குச் சேர்ந்தான்? தனக்கு உணவு வேண்டும். அதற்கு ஊதியம் வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் தொழில் செய்கிறான்.  வேலையாளாக இருக்கிறான். இங்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது, இது 'உணர்வு'  திட்டமிட்ட முறையில் தான் இந்தத் தொடர்பு அமைந்துள்ளது, எனவே தான் 'உணர்வு' என்ற எல்லைக்குள் அதனை வைக்கிறோம். உறவு என்பது அத்தகையதன்று. இவன்  எஜமான்னாக வேலை செய்கிறான். வேலையாளுடைய பணிகளையெல்லாம், அவற்றின் பயன்களையெல்லாம் அந்த எஜமானன் அனுபவிக்கிறான். காலம் செல்லச் செல்ல எஜமானன் பணியாளைடைய உயிரோடு ஒன்றி விடுகிறான்.  அன்பு கொள்கிறான்,  அவனுடைய சுக துக்கங்களில் கலந்து பார்க்கிறான். அதற்கு மேலாகவும் அந்த சுக துக்கங்களைப் பகிர்ந்த கொள்கிறான். இந்த இடத்தில் தான் 'உறவு' என்பதாக அமைகிறது. அப்படிப் பகிர்ந்து கொள்ளக் கூடிய உறவு எஜமான னிடம் ஏற்பட்ட பிறகு ஆரம்பத்தில் 'உணர்வு' மட்டும் இருந்த அந்தப் பணியாளிடம் என்ன ஏற்படும் என்றால் அவனுக்கும் அதே உறவு ஏற்படும்.

உறவு என்பது உறைந்து போவது, 'தோய்வு' என்றும் சொல்லலாம் அதனை. அந்தத் தோய்வானது இரண்டற இருக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------அருள் தந்தை.


























































































































































உணர்உணர்வு, உறவுவு, உறவு.

No comments:

Post a Comment