Saturday 22 August 2015

புலன் வழி தொடர்பு.

வாழ்க வையகம்-------------------------------------வாழ்க வளமுடன்.



புலன் வழி தொடர்பு.

காயின்றி பழம் இருக்க முடியாது.  காயாக இருக்கும் போது சுவை வேறுதான். ஆனால் காய் வேறு, பழம் வேறு அன்று.  காயினுடைய முதிர்ச்சிதான் பழம். எந்த ஞானியாக இருந்தாலும் உடலை எடுத்துவுடனே ஐந்து புலன்கள் தான் இயங்க ஆரம்பிக்கும், மூளை வளர்ச்சி வளரும் வரையிலே அன்னை வயிற்றிலே ஒரு air-conditioned  நிலை, சமமான உணர்வு, குழந்தைக்கு உணர்ச்சி இல்லை. வெளிச்சம் இல்லை, சுவையில்லை, மனம் இல்லை, ஐந்து புலன்களும் இயங்க வில்லை, வெளியே வந்து விழ்ந்தவுடனே, அந்தச் சூழ்நிலைக்கும் இந்தச் சூழ்நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக உடல் முழுவதும் பற்ற எரிவது போன்ற உணர்ச்சி. நாம்   air-conditioned  அறையிலிருந்து வெளியே வந்தோமேயானால், சில இடங்களில் பளிச்சென்று  அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றதல்லவா, இது போன்றே பிறந்த குழந்தை உணர்வைப் பெறுகின்றது, வீர், வீரென்று கத்துகின்றது.

அதன் பிறகு சிறிது நேரத்திலே சுவைக்கச் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கின்றார்கள். ஏதோ வெளிச்சம் தெரிகின்றது, பார்க்கின்றது, ஏதோ பேசுகின்றார்கள் கேட்கின்றது. இப்படி ஒவ்வொன்றாகப் பலன்கள் செயல்பட ஆரம்பிக்கின்ற பொழுது முதலில் ஞானியா இருந்தாலும் அவர்களுக்கும் புலன் வழிதான் உலகத் தொடர்பு ஏற்படுகின்றது.  அதன் பிறகுதான் உள்ளோளியாக உள்ள அறிவு பிரகாசம் அடைகின்றது.

-----------------------------------------------------------------------அருள் தந்தை.




No comments:

Post a Comment